Popular Posts
-
குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ் - உடல் நலன் - அறிவியற்களம் - Tamil Articles - Tamil web - One tamil entertainment website.
-
செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று...
-
எனது சிறு வயதிலிருந்து வெற்றியாளர்களை பற்றி படிப்பது பிடித்தமான ஓன்று .அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் "பில்கேட்ஸ் " பற்றி நா...
-
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர். =======================...
-
ஒரு நாள் மாலையில் ஓய்வாக எக்மோரிலுள்ள புளூ மவுண்டன் ஹோட்டலில் சுவையான மட்டன் பிரியாணியைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். என்னுடன் மலையாள மனோர...
-
என். உலகநாதன்: வடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்!!!
-
பதின் வயதினருக்கானது …. ஆகஸ்ட் 28, 2008 இல் 2:21 பிற்பகல் ( ALL POSTS , பாலியல் , மருத்துவம் ) Tags: இளமை , உடல்நலம்...
-
தமிழ் இணைய உலவி (வலையோடி ) - மென்பொருட்கள் - கணணி வளாகம் - Tamil Articles - Tamil web - One tamil entertainment website.
-
சிறுவயது முதலே நாளிதழ்களைப் படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு...
Monday, 27 June 2011
Wednesday, 22 June 2011
Thursday, 2 June 2011
செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று விட்டன.
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.
நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.
ஃ
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.
நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.
ஃ
ஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை
ஒரு நாள் மாலையில் ஓய்வாக எக்மோரிலுள்ள புளூ மவுண்டன் ஹோட்டலில் சுவையான மட்டன் பிரியாணியைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். என்னுடன் மலையாள மனோரமா இயர்புக் ஆசிரியர் நண்பர் ராமனும், பத்திரிகையாளர் நண்பர் ஆரிஃப் அவர்களும். மட்டன் பிரியாணி என்றால் எனக்கு எப்போதுமே பிரியம் ஜாஸ்தி. அதுவும் இஸ்லாமியர்களின் கைவண்ணத்தில் தயாராகும் சமாச்சாரமெனில் சொல்லவே வேண்டாம்.
பிரியாணியையும், அதைவிடச் சுவையான பல்வேறு விஷயங்களையும் மென்று கொண்டிருக்கையில் பேச்சினூடே நண்பர் ராமர் சொன்னார், “என்னோட புக் ஒண்ணு வந்திருக்கு. ஒரு மொழிபெயர்ப்பு. ஆடு ஜீவிதம்ன்னு பேரு“.
மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறீர்களா ? என்று கேட்டேன். ஆமா, பென்யமீன்னு ஒரு எழுத்தாளரோட அற்புதமான படைப்பு அது. படிச்சுப் பாருங்க. என்றார். மனசுக்குள் அந்தப் பெயரை மட்டும் எழுதிக் கொண்டேன். தமிழில் உயிர்மை வெளியீடாக வந்திருந்தது நாவல்.
என்னைப் பற்றி எனக்குத் தான் தெரியுமே ! காலைல ஒன்பது மணிக்கு அலுவலகம் ஓடினால் கூர்க்கா ரோந்து போற நேரத்துல தான் வீடு வந்து சேருவேன். இதை ஐ.டி ஜீவிதம்ன்னு சொல்லலாமா ? இந்த ஓட்டத்துக்கு இடையே ஆடு ஜீவிதம் மனசுக்குள் இருந்தாலும் புக்கை போய் வாங்கக் கூடிய அளவுக்கு நேரம் கிடைக்கவேயில்லை. எப்படியாவது இந்த வாரம் போய் வாங்கியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு பார்சல் வீட்டுக்கு வந்தது. பிரித்துப் பார்த்தால் “ஆடு ஜீவிதம்” நூல்.
இவன் என்னிக்கு போய், எப்போ வாங்கி, என்னத்த வாசித்து என நொந்து நூடுல்ஸ் ஆகிப் போன எழுத்தாளரே சொந்தக் காசைப் போட்டு ஒரு புக்கை அனுப்பி வைத்திருந்தார். மானசீகமாக ஒரு நன்றியை மட்டும் சொல்லிக் கொண்டு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.
பல்வேறு கனவுகளோடு குடும்பத்தை விட்டு விட்டு கல்ஃப் போகும் ஒருவன் அங்கே படும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்பி வரும் நிகழ்வுகளும் தான் கதை. இப்படிச் சொன்னால் ஒருவேளை நீங்கள் ‘இதிலென்ன இருக்கிறது’ என யோசிக்கக் கூடும். உண்மையில் நான்கூட அப்படித் தான் நினைத்தேன். பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அந்த நாயகன் நஜீப்-போல மாறிப் போனேன். அவனோடு அழுக்கு ஆடையில் புரண்டு, ஆடுகளின் வாழ்க்கையைப் படித்தறிந்து, உதை வாங்கி, பெல்ட்டால் அடி வாங்கி, தப்பித்து, திகிலடைந்து, ஜெயிலில் உழன்று படித்து முடிக்கும் போது மன பாரத்தால் உடல் பத்து கிலோ அதிகரித்திருப்பது போல ஒரு உணர்வு.
மணலும், மணல் சார்ந்த இடமும் தான் கதைக் களன். ஏதோ கம்பெனியில் வேலைசெய்யப் போகிறோம் எனும் கனவுடன் வளைகுடா நாட்டுக்கு வரும் நாயகனுக்கு வாய்ப்பதோ கொடுமைக்கார அர்பாபுவும், ஆட்டு மந்தைகளும் தான். அர்பாவுவின் கண்களுக்கு ஒரு அடிமையாய் மாறிப்போகும் நஜீப் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலின் வீரியத்தில் சூழப்படுவதை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் பென்யமீன்.
நெற்றியில் விழும் ஒரு துளி நீர், நேரம் செல்லச் செல்ல சம்மட்டி அடியின் அளவுக்கு வலிக்கும் என்பது போல, நஜீபின் வாழ்க்கை பக்கங்கள் புரட்டப் புரட்ட வலியைக் கூட்டிக் கொண்டே போகிறது. துயரங்களிடையே வாழ்க்கையின் நிலையையும், அர்த்தத்தையும் புரிய வைக்கும் தத்துவங்களைப் போல நூலும் போகிற போக்கில் சொல்லிச் செல்கின்ற கருத்துகள் அனாயாசமானவை. சமீபத்தில் வேறெந்த நாவலையும் படித்து நான் இப்படிக் கலங்கிப் போனதில்லை எனும் எனது கூற்றில் சிறிதும் கலப்படமில்லை !
ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கான எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் தமிழ் ஆடு ஜீவிதம்
இருப்பது மொழிபெயர்ப்பாளர் ராமன் அவர்களுடைய மொழி ஆளுமையை பறை சாற்றுகிறது. பத்திரிகை உலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் பரிச்சயமும், ஏற்கனவே குஞ்ஞப்துல்லாவின் மருந்து நாவலை மொழிபெயர்த்த அனுபவமும் நூலை அழகாக முழுமைப்படுத்தியிருக்கிறது. வேண்டுமென்றே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மலையாள வார்த்தைகளை விட்டுச் சென்று கவித்துவப்படுத்தியிருக்கிறார். மற்றபடி, இது ஒரு மொழி பெயர்ப்பு நாவல் எனும் உணர்வே எங்கும் எழவில்லை.
“படிக்கலேன்னா ஆடுமேய்க்கத் தான் போவே’ என்று ஊரில் திட்டுவார்கள். இந்த நூலைப் படிக்கும் எவரும் இனிமேல் எந்தக் காலத்திலும் அப்படித் திட்டமாட்டார்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்.
பத்தனம் திட்டாவைச் சேர்ந்த ஆசிரியர் பென்யாமீன் தற்போது வசிப்பது பெஹ்ரைனில் என்கிறது அவரைப் பற்றியக் குறிப்பு. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் பாட நூலாகவும் மாறிப் போயிருக்கும் இந்த நூல் இவருக்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
மலையாள நூல் அட்டையில் சொல்லப்பட்டிருக்கும் “நாம் அனுபவிக்காத்த ஜீவிதங்ஙளெல்லாம் நமுக்கு வெறும் கெட்டுக் கதகள் மாத்றமாணு” என்பதோடு ஒத்துப் போகாமல் இருக்க முடியவில்லை.
தமிழில் வந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்களில் மிகவும் முக்கியமான இடத்தை இந்த நூல் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஆசிரியர் நண்பர் ராமனை எவ்வளவு பாராட்டினாலும் தமிழ் கோபித்துக் கொள்ளப் போவதில்லை ! வாழ்த்துக்கள் சார் !
நாவல் பிரியர்களுக்கும், இலக்கிய ரசிகர்களுக்கும், வாழ்க்கையை நேசிப்பவர்களுக்குமான நூல் ஆடு ஜீவிதம்.
உயிர்மை பதிப்பக வெளியீடு, விலை 140.
பிடித்திருந்தால் வாக்களியுங்கள்
பிரியாணியையும், அதைவிடச் சுவையான பல்வேறு விஷயங்களையும் மென்று கொண்டிருக்கையில் பேச்சினூடே நண்பர் ராமர் சொன்னார், “என்னோட புக் ஒண்ணு வந்திருக்கு. ஒரு மொழிபெயர்ப்பு. ஆடு ஜீவிதம்ன்னு பேரு“.
மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறீர்களா ? என்று கேட்டேன். ஆமா, பென்யமீன்னு ஒரு எழுத்தாளரோட அற்புதமான படைப்பு அது. படிச்சுப் பாருங்க. என்றார். மனசுக்குள் அந்தப் பெயரை மட்டும் எழுதிக் கொண்டேன். தமிழில் உயிர்மை வெளியீடாக வந்திருந்தது நாவல்.
என்னைப் பற்றி எனக்குத் தான் தெரியுமே ! காலைல ஒன்பது மணிக்கு அலுவலகம் ஓடினால் கூர்க்கா ரோந்து போற நேரத்துல தான் வீடு வந்து சேருவேன். இதை ஐ.டி ஜீவிதம்ன்னு சொல்லலாமா ? இந்த ஓட்டத்துக்கு இடையே ஆடு ஜீவிதம் மனசுக்குள் இருந்தாலும் புக்கை போய் வாங்கக் கூடிய அளவுக்கு நேரம் கிடைக்கவேயில்லை. எப்படியாவது இந்த வாரம் போய் வாங்கியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு பார்சல் வீட்டுக்கு வந்தது. பிரித்துப் பார்த்தால் “ஆடு ஜீவிதம்” நூல்.
இவன் என்னிக்கு போய், எப்போ வாங்கி, என்னத்த வாசித்து என நொந்து நூடுல்ஸ் ஆகிப் போன எழுத்தாளரே சொந்தக் காசைப் போட்டு ஒரு புக்கை அனுப்பி வைத்திருந்தார். மானசீகமாக ஒரு நன்றியை மட்டும் சொல்லிக் கொண்டு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.
பல்வேறு கனவுகளோடு குடும்பத்தை விட்டு விட்டு கல்ஃப் போகும் ஒருவன் அங்கே படும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்பி வரும் நிகழ்வுகளும் தான் கதை. இப்படிச் சொன்னால் ஒருவேளை நீங்கள் ‘இதிலென்ன இருக்கிறது’ என யோசிக்கக் கூடும். உண்மையில் நான்கூட அப்படித் தான் நினைத்தேன். பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அந்த நாயகன் நஜீப்-போல மாறிப் போனேன். அவனோடு அழுக்கு ஆடையில் புரண்டு, ஆடுகளின் வாழ்க்கையைப் படித்தறிந்து, உதை வாங்கி, பெல்ட்டால் அடி வாங்கி, தப்பித்து, திகிலடைந்து, ஜெயிலில் உழன்று படித்து முடிக்கும் போது மன பாரத்தால் உடல் பத்து கிலோ அதிகரித்திருப்பது போல ஒரு உணர்வு.
மணலும், மணல் சார்ந்த இடமும் தான் கதைக் களன். ஏதோ கம்பெனியில் வேலைசெய்யப் போகிறோம் எனும் கனவுடன் வளைகுடா நாட்டுக்கு வரும் நாயகனுக்கு வாய்ப்பதோ கொடுமைக்கார அர்பாபுவும், ஆட்டு மந்தைகளும் தான். அர்பாவுவின் கண்களுக்கு ஒரு அடிமையாய் மாறிப்போகும் நஜீப் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலின் வீரியத்தில் சூழப்படுவதை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் பென்யமீன்.
நெற்றியில் விழும் ஒரு துளி நீர், நேரம் செல்லச் செல்ல சம்மட்டி அடியின் அளவுக்கு வலிக்கும் என்பது போல, நஜீபின் வாழ்க்கை பக்கங்கள் புரட்டப் புரட்ட வலியைக் கூட்டிக் கொண்டே போகிறது. துயரங்களிடையே வாழ்க்கையின் நிலையையும், அர்த்தத்தையும் புரிய வைக்கும் தத்துவங்களைப் போல நூலும் போகிற போக்கில் சொல்லிச் செல்கின்ற கருத்துகள் அனாயாசமானவை. சமீபத்தில் வேறெந்த நாவலையும் படித்து நான் இப்படிக் கலங்கிப் போனதில்லை எனும் எனது கூற்றில் சிறிதும் கலப்படமில்லை !
ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கான எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் தமிழ் ஆடு ஜீவிதம்
“படிக்கலேன்னா ஆடுமேய்க்கத் தான் போவே’ என்று ஊரில் திட்டுவார்கள். இந்த நூலைப் படிக்கும் எவரும் இனிமேல் எந்தக் காலத்திலும் அப்படித் திட்டமாட்டார்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்.
பத்தனம் திட்டாவைச் சேர்ந்த ஆசிரியர் பென்யாமீன் தற்போது வசிப்பது பெஹ்ரைனில் என்கிறது அவரைப் பற்றியக் குறிப்பு. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் பாட நூலாகவும் மாறிப் போயிருக்கும் இந்த நூல் இவருக்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
மலையாள நூல் அட்டையில் சொல்லப்பட்டிருக்கும் “நாம் அனுபவிக்காத்த ஜீவிதங்ஙளெல்லாம் நமுக்கு வெறும் கெட்டுக் கதகள் மாத்றமாணு” என்பதோடு ஒத்துப் போகாமல் இருக்க முடியவில்லை.
தமிழில் வந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்களில் மிகவும் முக்கியமான இடத்தை இந்த நூல் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஆசிரியர் நண்பர் ராமனை எவ்வளவு பாராட்டினாலும் தமிழ் கோபித்துக் கொள்ளப் போவதில்லை ! வாழ்த்துக்கள் சார் !
நாவல் பிரியர்களுக்கும், இலக்கிய ரசிகர்களுக்கும், வாழ்க்கையை நேசிப்பவர்களுக்குமான நூல் ஆடு ஜீவிதம்.
உயிர்மை பதிப்பக வெளியீடு, விலை 140.
பிடித்திருந்தால் வாக்களியுங்கள்
பதின் வயதினருக்கானது …. ஆகஸ்ட் 28, 2008 இல் 2:21 பிற்பகல் (ALL POSTS, பாலியல், மருத்துவம்) Tags: இளமை, உடல்நலம், தூக்கம், மருத்துவம் முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன. நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன. இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது. ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது. முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும். பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார். தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.
பதின் வயதினருக்கானது ….
ஆகஸ்ட் 28, 2008 இல் 2:21 பிற்பகல் (ALL POSTS, பாலியல், மருத்துவம்)
Tags: இளமை, உடல்நலம், தூக்கம், மருத்துவம்
Tags: இளமை, உடல்நலம், தூக்கம், மருத்துவம்
முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.
நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.
இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.
ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.
உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.
பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.
Subscribe to:
Comments (Atom)